கீழத்தெரு முஹல்லாவை சேர்ந்த மர்ஹூம் செ.மு. அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் அ. சாகுல் ஹமீது (இடுப்புகட்டி) அவர்களின் மனைவியும், ஹாஜா சகாபுதீன் (சோனி), முகம்மது ஜில்கிப்லி ஆகியோரின் தாயாருமான ஆயிஸா அம்மாள் அவர்கள் நேற்று(02/04/24) பிற்பகல் காட்டுப்பள்ளி எதிரே உள்ள ஹாஜியார் லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(03/04/24) அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.