Thursday, March 12, 2026

சவுதி அரேபியா யான்புவில் IWF-ன் சமூக நல்லிணக்க கருத்தரங்கம்., திரளான தமிழர்கள் பங்கேற்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

சவூதி அரேபியா யான்பு பகுதியில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) யான்பு மண்டலம் சார்பில் பலத் அல்ஹிக்கி ஹோட்டலில் நேற்று(26/09/2024) வியாழக்கிழமை இரவு 8 சமூக நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருதரங்கம் IWFன் யான்பு மண்டல தலைவர் பந்தநல்லூர் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.இந்த கருதரங்கத்தை ஷபிக்குர்ரஹ்மான் கிராத் ஓதி துவங்கிவைக்க, மனித நேய மக்கள் கட்சியின் மண்டல செயலர் அடியற்கை சேக்தாவூத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மண்டல பொருளாளர் பாளை அனீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த கருதரங்கத்திற்கு மண்டல துணைத்தலைவர் ஏர்வாடி அன்சாரி, மண்டல தமுமுக செயலாளர் உடன்குடி செய்யது அபுபக்கர் சித்திக், பலத் கிளைச் பொருளாளர் ஶ்ரீவை இமாம் காதர் நியாஸ், பலத் கிளைச் செயலாளர் ராமநாதபுரம் அபூதாஹிர், டொயோட்டோ கிளை நிர்வாகிகளான கிளைத் தலைவர் கட்டிமேடு அன்புதீன், கிளைச் செயலாளர் ராமநாதபுரம் இலியாஸ், கிளை பொருளாளர் சென்னை வாஜித், கிளை துணைச் செயலாளர் சென்னை ரபீக், வி. களத்தூர் ஜியாவுல் ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த சமூக நல்லிணக்க நிகழ்விற்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது கலந்துகொண்டு தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும், இயக்கமாக திரளவேண்டிய அவசியம் குறித்தும் விரிவாக சிறப்புரையாற்றினார்.இறுதியாக, பலத் கிளை தலைவர் தஞ்சை முஹம்மது ஷாஜஹான் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிவுற்றது.யான்பு வாழ் தமிழ் மக்கள் பெருமளவு இந்த சமூக நல்லிணக்க கருத்தரங்க நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...
spot_imgspot_imgspot_imgspot_img