அதிரை எக்ஸ்பிரஸ்:- திமுக செயல்தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை கூட்டமைப்பின் சார்பாக தலைவர்கள் சந்தித்தனர்.
முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசு கொண்டு வந்த மசோதாவிற்கு எதிரான நிலைபாட்டை எடுத்ததற்காக திமுகவிற்கு நன்றி தெரிவித்ததோடு மீண்டும் நாடாளுமன்ற மேலவையில் மத்திய அரசு முத்தலாக் சட்ட மசோதா கொண்டுவரவிருக்கும் நிலையில், அந்த சட்ட மசோதாவிற்கு எதிரான நிலைபாட்டை திமுக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
ஜமாத்துல் உலாமா சபையின் மாநில தலைவர் மௌலானா மௌலவி பி.எ.காஜா மொய்னுதீன் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கலந்து கொண்டார். மேலும் இந்த சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில்,மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, வெல்பேர் ஃபார்ட்டி மாநில தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், ஜலாலுதீன், மன்சூர் காஷிபி, பசீர் அஹமது, பி.எஸ்.ஹமீது, ஷாஜஹான், இலியாஸ் ரியாஜி, நிஜாமுதீன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.