தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காலியார் தெரு மற்றும் வெற்றிலைகார தெரு சார்பாக இன்று மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி அப்பகுதி இளைஞர்கள் சார்பாக எற்பாடு செய்யபட்டது.இதில் அதிரை சார்ந்த இளைஞர்கள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொன்டனர்.
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரையில் உள்ள அனைத்து இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக நுழைவாயில் நின்று மிக அழகாக அனைத்து தெரு இளைஞர்களையும் வரவேற்றனர்.
இறுதியில் நிகழச்சி ஏற்பாட்டாளர் சார்பாக கலந்து கொண்ட அனைத்து இளைஞர்களுக்கும் அதைப்போல் பொருளாதார உதவி செய்த முஹல்லா வாசிகள் மற்றும் வெளிநாடு நண்பர்களுக்கும் நன்றினை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.