அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 அன்று தொடங்கியது.
இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி MIET அணியினரும் கரம்பயம் அணியினரும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 0-0 என்ற கோல் கணக்கில் விளையாடி முடித்தனர். பின்னர் நடைபெற்ற இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் கரம்பயம் அணி 2 கோல்கள் அடித்து 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சி MIET அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளையதினம்(29/07/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :
கரம்பயம் – வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் அதிராம்பட்டினம்