மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்களும் போராடி வருகின்றனர்.
இந்தியாவை கடந்து வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று ஜப்பான் வாழ் இந்தியர்கள் டோக்யோ நகரத்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.