கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தப்லீக் ஜமாத்திற்கு எதிராகவும் சங்கபரிவார இயக்கங்களால் தொடர்ந்து வன்முறை மற்றும் பொய்யான கருத்துக்கள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றது.
ஆகவே இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவாருர் மாவட்டம் சார்பாக சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறை அதிகாரிகளிடம் (Cyber Crime) திருவாருர் மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் அவர்களால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்று வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கின்றது.
இப்படிக்கு
மாவட்ட செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
திருவாருர் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்டம்