தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் திமுக சார்பில் கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்தனர்.
ஒன்றிணைவோம் வா என்ற புதிய திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் திமுகவினர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன,எம்.எல்.ஏ வழிகாட்டல் படி பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை ஒன்றியப் பொறுப்பாளர் திரு.க.அன்பழகன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. மூர்த்தி, சந்திரபோஸ், ஆரோ.அருள், பன்னீர்செல்வம், இளங்கோ மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.