தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பகுதியில் தடைசெய்யப்பட்ட தங்கு தடையின்றி அமோகமாக நடைபெற்று வருகிறது.
மல்லிப்பட்டிணம் கடைவீதி,டீ கடைகள்,மக்கள் கூடிய பிரதான சாலை என பொது இடங்களில் எந்தவித அச்சமின்றி தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்து வருகின்றனர். தினமும் வெளியூர்களில் இருந்து வந்து ஒரு நம்பர்,இரண்டு நம்பர்,கேரளா லாட்டரி சீட்டு போன்றவற்றை விற்றுவிட்டு செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
லாட்டரி சீட்டு விற்பனையின் மூலம் முதியவர்கள்,இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பணத்தை கொடுத்து லாட்டரி நம்பர் வாங்கி செல்கின்றனர்.
லாட்டரி விற்பனையை காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்வது கிடையாது என்றும்,அவர்களின் துணை கொண்டே நடத்தப்படுகிறதோ என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
காவல்துறையினர் உடனடியாக லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்திட வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.