Saturday, September 13, 2025

நெறிமுறைகளை பின்பற்றி நோன்பு கஞ்சி விநியோகியுங்கள் – ஜமாஅத்துல் உலமா அறிவுறுத்தல்!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா தொற்று உச்சம் அடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பு குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முஸ்லீம்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், அல்லாஹ்வின் நாட்டத்தை பொருந்திக் கொள்ளும் வகையில் தமிழக அரசின் ஆணையை ஏற்று வரும் 30/04/2021 வரை அனைத்து தொழுகைகளையும் வீடுகளிலேயே நிறைவேற்றிக் கொள்ளுமாறு இஸ்லாமியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பள்ளிவாசல் பணியாளர்கள் பள்ளியில் தொழுகை நடத்த அனுமதி உள்ளதால், ஐவேலைத் தொழுகையையும் தராவீஹ் தொழுகையையும் பள்ளிப் பணியாளர்களை கொண்டு நிறைவேற்றி கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசலில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்றும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நோன்பு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img