கொரோனா விதிமுறைகளை மீறி ஊர் சுற்றும் இளைஞர்களின் இரு சக்கர வாகனங்களை காவல் துறை பறிமுதல் செய்து வருகின்றது.
அதிராம்பட்டிணம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவ்வபோது தீவிர ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.அப்போது முக கவசம் இன்றி வருவோர் தேவையற்ற முறையில் ஊர் சுற்றுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தேவையற்ற முறையில் ஊர் சுற்றும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.கடந்த சில நாட்களாக பிடிப்படும் இருசக்கர வாகனங்களால் காவல் நிலைய வளாகம் நிரம்பி வருகிறது.
இது குறித்து காவல்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,தொடர் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபடுவார்கள் என்றும் அரசின் சட்டங்களை மதிக்காத எவர் மீதும் நடவடிக்கை பாயும் என எச்சரித்தார்.