Saturday, September 13, 2025

அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. தமிழக விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள்!

spot_imgspot_imgspot_imgspot_img

ஓமிக்ரான் உருமாறிய கொரோனா காரணமாக அதிக ஆபத்தான 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் சர்வதேச விமான பயணிகளுக்குத் தமிழ்நாடு சுகாதார துறை பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வைரஸ்கள் தான் முந்தைய அலைகளை ஏற்படுத்தின. இதனால் உருமாறிய கொரோனா வைரஸ்களை உலக நாடுகள் எச்சரிக்கையுடனேயே கையாள்கின்றன. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது.

ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய உருமாறிய கொரோனா அதிக மாறுபாடுகளைக் கொண்டிருப்பதால் மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. உலக சுகாதார அமைப்பும் இதனை ஆபத்தான கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இந்த உருமாறிய கொரோனா காரணமாகப் பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குப் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

ஓமிக்ரான் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்தச் சூழலில் அதிக ஆபத்தான 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் சர்வதேச விமான பயணிகளுக்குப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய ஆபத்தான நாடுகளில் இருந்து வருவோருக்கு இந்த புதிய கட்டுப்பாடுகள் பொருந்தும் எனத் தமிழ்நாடு பொதுச்சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பயணத்தைத் தொடங்கும் முன் கொரோனா நெகடிவ் சான்றிதழை சமர்ப்பித்திருக்க வேண்டும். தமிழகம் வந்த பிறகும் விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பிறகு 7 நாட்கள் கட்டாய தனிமைக்குப் பிறகு 8ஆம் நாள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதிலும் நெகடிவ் என முடிவு வந்த பிறகு அடுத்த 7 நாட்களுக்கும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து வருவோர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருக்கும்பட்சத்தில் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்காக அவர்களின் மாதிரிகள் அனுப்பப்படும் என்றும் அதுவரை அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனத் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு நடவடிக்கைகளைக் கவனிக்கத் தமிழ்நாட்டில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களுக்கும் தலா ஒரு சுகாதார திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர்களை தொடர்பு கொள்ளும் எண்களையும் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது . சென்னை – மருத்துவர் பெருமாள் (9444045529), திருச்சி – மருத்துவர் ஸ்ரீராம் (8860250217), கோவை – மருத்துவர் விஜயகுமார் (8762627911), மதுரை – மருத்துவர் அருண் சுந்தரேசன் (9842125593) ஆகியோர் சுகாதார திட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img