அதிரை தரகர் தெருவில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தார்சாலை அமைக்கும் பணி, நகராட்சி தேர்தல் நெருங்குவதால் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த சாலை தரமற்று அமைக்கப்படுவதாக எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர், ஒப்பந்ததாரர்களிடம் தார்சாலையை தரமாக அமைக்க வலியுறுத்தினர். மேலும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு தார்சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டனர். இந்த தர பரிசோதனையில் தார்சாலை தரமற்றது என நிரூபனமானால் அந்த பணிக்கான தொகையை ஒப்பந்ததாரருக்கு கொடுக்க கூடாது எனவும் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் வலியுறுத்தினர். முன்னதாக தார்சாலை தரமற்று அமைக்கப்படுவது குறித்து தகவல் தெரிவித்த அப்பகுதி இளைஞர்களை எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் பாராட்டினர்.
More like this
அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...