Saturday, April 27, 2024

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தஞ்சையில் தமுமுக ஆர்பாட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

தமுமுக தஞ்சை மாநகர தெற்கு மற்றும் வடக்கு சார்பாக இன்று தஞ்சை ரயில் நிலையம் அருகாமையில் பாபர் மசூதியை இடித்த கயவர்களை கண்டித்து பயங்கரவாத எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மமக மாவட்ட தலைவர் S.அஹமது ஹாஜா தலைமையேற்று, M.ஜஃபருல்லாஹ், Er.A. முஹம்மது இலியாஸ், G.முஹம்மது செல்லப்பா,M.முஹம்மது சலீம் புலவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலர் A.ஷேக் மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து விசிக கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், மமக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் சரவண பாண்டியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்ற இறுதியாக தலைமைக் கழக பேச்சாளர் கோவை.ஜெய்னுலாப்தீன் கண்டன உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, எதிர்வரும் ஆண்டிற்குள் இஸ்லாமியர்களிடம் பாபர் மசூதியை ஒப்படைக்காவிடில் அடுத்த டிசம்பர் 5 ம் நாள் தமுமுகவின் தலைமை கட்டளையிட்டால் அயோத்தி சென்று தடையை உடைத்து பாபர் மசூதியை கட்டுவோம் என்றார். இறுதியாக தஞ்சை ரியாஸ் அஹமது நன்றியுரை கூறினார். இந்த ஆர்பட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துக் கொண்டது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....