இது நவீன நீர்வழி பாதையல்ல!! அதிரையின் பிரதான சாலை! என்கிற தலைப்பில் கடந்த 7ம் தேதி அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. அதில் பிஸ்மி மெடிக்கல்-அரசு மருத்துவமனை சாலையின் மோசமான நிலை காரணமாக மக்களின் சந்திக்கும் சிரமங்களை சுட்டிக் காட்டி இருந்தோம்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், விரைவாக சாலை பணியை மேற்கொண்டனர். அந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக இந்த சாலை பணி குறித்து அதிரை நகர எஸ்.டி.பி.ஐ, OKM.சிபகதுல்லாஹ், அஜ்மல் உள்ளிட்டோரும் சம்மந்தப்பட்ட துறைக்கு புகார் அளித்து தொடர்ச்சியாக பின்தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.