Friday, May 3, 2024

அதிராம்பட்டினம்,பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு!

Share post:

Date:

- Advertisement -

செகந்திராபாத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த இந்த சிறப்பு ரயிலுக்கு, பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வந்தது. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளில் இருந்து சென்னையில் இருந்து வருவதற்கும், சென்னை செல்வதற்கும் நேரடி ரயிலாக இந்த செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இருந்து வந்தது.

பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கடந்த இரு மாதங்களாக செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது செகந்திராபாத்-ராமநாதபுரம் இடையே மேலும் நான்கு மாதத்திற்கு சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 07695)

ராமநாதபுரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் (வண்டி எண் 07696)

அதன்படி வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இயங்கிய அதே நேரம், கால அட்டவணைப்படியே இந்த ரயில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரயிலுக்கான முன்பதிவும் ஆரம்பமாகிவிட்டது.

மேலும் திருவாரூர் – காரைக்குடி வழித்தடத்தில் இயக்குவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம்-செங்கோட்டை வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயில், எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் விரைந்து இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கங்கள், ரயில்வே ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SC – RMD Time Table

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...