பட்டுக்கோட்டை நகராட்சியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பட்டுக்கோட்டை மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கா.அண்ணாதுரை பேசினார். இதனையடுத்து ரூ.20கோடி மதிப்பீட்டில் பட்டுக்கோட்டையில் புதிய பேருந்துநிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளநிலையில் விழா ஏற்பாட்டு பணிகளை எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் வசதிகள் குறித்து கா.அண்ணாதுரையிடம் பொறியாளர்கள் விளக்கினர்.