Saturday, May 11, 2024

கிடைத்த வாய்ப்பில் கோல் அடித்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு நரியம்பாளையத்தில் ரூ.20கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது விழாவில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, பட்டுக்கோட்டை நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய பேருந்துநிலையம் அமைக்க நிதி ஒதுக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பட்டுக்கோட்டையில் மார்க்கெட் மற்றும் சீர்மிகு பள்ளி திட்டங்களை சுட்டிக் காட்டிய அவர், பாதாள சாக்கடை திட்டத்தையும் பட்டுக்கோட்டை நகரில் செயல்படுத்தி கொசுத்தொல்லை இல்லாத நகராக பட்டுக்கோட்டையை மாற்ற கோரிக்கைவிடுத்தார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கையை அங்கு கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...