மீட்டர் கேஜ் ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் மீண்டும் இந்த வழித்தடத்தில் இயக்கவேண்டும் என அதிரை நல்வாழ்வு பேரவை தலைவர் அஹ்மத் அலி ஜாஃபர் தலைமையில் அதிராம் பட்டினம் ரயில் நிலையத்தில் அறவழி போராட்டம் அறிவித்துள்ளது.
பாரம்பரிய மிக்க அதிராம் பட்டினம் ரயில் நிலையத்தில் அதிக வருவாய் ஈட்டிய பொழுதும், சென்னைக்கு செல்ல ரயில் நிறுத்தம் செய்யாத ரயில்வே இலாக்கா அதிகாரிகளை கண்டித்தும், கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும். இவ்வழித்தடத்தில் இயக்கிட கோரியும், தாம்பரம்- செங்கோட்டை தாம்பரம் அதிவிரைவு ரயிலை அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வலியுறுத்தியும் மாபெரும் கண்டன அறவழி போரட்டம் நாளை 1/9/2023 நண்பகல் 1.30 மணியளவில் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெறும் என்று அதிரை நல்வாழ்வு பேரவை அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ரயில் பயணிகள் சங்கமும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பை ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அழைப்பு விடுத்துள்ளனர்.