Home » ஜித்தா ரயில் நிலையத்தில் தவித்த இலங்கை தமிழ் பெண்மணிக்கு உதவிய IWF அமைப்பினர் !!

ஜித்தா ரயில் நிலையத்தில் தவித்த இலங்கை தமிழ் பெண்மணிக்கு உதவிய IWF அமைப்பினர் !!

0 comment

கடந்த 5-9-23 அன்று இலங்கையிலிருந்து சவூதிக்கு வீட்டு வேலைக்கு வந்த தமிழ் பெண்மணி ஒருவர் பல மணி நேரமாக யாரும் அழைத்து போக வராத நிலையில் ஜித்தா ரயில் நிலையத்தில் தவித்துக் கொண்டு இருந்துள்ளார்.

தாய்மொழியான தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாமலும், கபிலின் தொடர்பு எண் தெரியாமலும் தவித்த நிலையில் அங்கு சென்ற IWF செயற்குழு உறுப்பினர் மெய்தீன் அவர்கள் உடனடியாக மண்டல குழுமத்தில் தெரிவித்ததை தொடர்ந்து


மண்டல PRO அஹ்மத் பஷிர் அவர்கள் உடனடியாக அவரது இலங்கை நண்பரிடம் தெரிவித்து. இலங்கையில் உள்ள ஏஜெண்டை தொடர்பு கொண்டு அவர் இந்த இலங்கை தமிழ் பெண்ணின் விவரங்களை தெரியப்படுத்தி மேலும் சவூதி ஸ்பான்சரிடம் தகவல் தெரிவிக்கபட்டு பின்பு ஸ்பான்சர் நேரடியாக ரயில் நிலையத்திற்கு வந்து பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளார்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter