பாலஸ்தீன் மீதான தாக்குதலை தடுத்திட வேண்டும் – அதிரையில் SDPI கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரம் !!
பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது.
இதனால் அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியாகி வருகிறார்கள் என அல் ஜசீரா போன்ற ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகிறது. இதனை கண்டித்து உலகில் பல்வேறு நாடுகளில் சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் SDPI கட்சியின் சார்பில் பதாகை ஏந்தி அதிராம்பட்டினம் நகரில் உள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் தொழுகைக்கு பின்னர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இந்த போராட்டத்தில் ஏராளமான அக் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.