Wednesday, May 15, 2024

அதிரை கடற்கரைத்தெரு வாழைக்குளம் தூர்வாரும் பணி தொடக்கம்!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள வாழைக்குளம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. கோரை புற்களால் படர்ந்து காணப்படும் வாழைக்குளத்தை தூர்வார கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் முயற்சி எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(KAIFA) அமைப்பின் உதவியுடன் இன்று வெள்ளிக்கிழமை வாழைக்குளத்தை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. குளத்தை அகலப்படுத்தி சுற்றிலும் கரைகளும் அமைக்கப்பட உள்ளது. அதிரை கடற்கரைத்தெரு வாழைக்குளம், கைஃபா அமைப்பு தூர்வாரும் 190வது குளம் ஆகும்.

இந்நிகழ்வில் கைஃபா அமைப்பின் தலைவரும், திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணை செயலாளருமான கார்த்திகேயன் வேல்சாமி, கைஃபா அமைப்பின் செயலாளர் பிரபாகரன், கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், லயன்ஸ் சங்க தலைவர் குப்பாஷா அகமது கபீர், செயலாளர் ஹாஜா நஸ்ருதீன், 22வது வார்டு நகரமன்ற உறுப்பினர் செய்யது முஹம்மது, தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், தெருவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...