Tuesday, May 14, 2024

அதிரையில் ஆதரவற்றோர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் CBD தஞ்சை மாவட்டம் & மஹாசக்தி பெண்கள் தொண்டு அறக்கட்டளை..!!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ச்சியாக கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று(23/02/24) கிரசண்ட் பிளட் டோனர்ஸ் தஞ்சை மாவட்டம்  மற்றும் மஹாசக்தி பெண்கள் தொண்டு அறக்கட்டளைன் ஒத்துழைப்போடு அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்று உடல்நிலை குன்றிய நிலையில் இருந்த முகமது யூசுப் என்ற நபரை மீட்டெடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் அவர் குணமடைந்து பிறகு அவரை காப்பகத்தில் சேர்த்து பராமரிகவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக ஆதரவற்ற நிலையில் யாசகம் பெற்றுக் கொண்டிருக்கும் வயது முதிர்ந்தவர்களையும், மனவளர்ச்சி குன்றியோரையும் மீட்டெடுத்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள ஆய்வுகள் மேற்கொண்டனர்.


இந்நிகழ்வின் போது CBD அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் பேரா.செய்யது அகமது கபீர், மஹாசக்தி பெண்கள் தொண்டு அறக்கட்டளையின் நிறுவனர் சகோதரி.R.ஜெயலட்சுமி ரெத்தினம், CBDன் அதிரை நகர நிர்வாகிகள் முகமது இஸ்மாயில், பகுருதீன் ஆகியோர் களத்தில் சேவையாற்றியுள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...