தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் தூய்மையான அதிரையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் அதிரை சுற்றுச்சூழல் மன்றம்90.4 சார்பில் பெண்களுக்கான தூய்மையான அதிரையை உருவாக்குவோம் என்ற கருத்தரங்க நிகழ்ச்சி அதிரை இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் வருகிற(13/05/2018) அன்று மாலை சுமார் 04:30 மணிமுதல் 06:30மணிவரை நடைபெறவுள்ளது.
இந்த கருத்தரங்க நிகழ்ச்சியை Dr.H.இர்ஷாத் நஸ்ரின் MBBS.,D.G.O அவர்கள் துவங்கி வைக்கிறார். இக்கருத்தரங்க உரையை திருமதி. I.பிரியதர்ஷினி வழங்க உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சி பெண்களுக்காக மட்டுமே நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பெண்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.