Saturday, May 11, 2024

சொந்த செலவில் நீர்நிலைகளை தூர்வாரும் அதிரை கடற்கரைத் தெருவாசிகள் !

Share post:

Date:

- Advertisement -

அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றத்தினர் கடற்கரைத் தெருவில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத்தின் புதிய நிர்வாகம் தெரு சார்ந்த அடிப்படை தேவைகளை அதிரடியாக செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கடற்கரைத் தெரு நீர்நிலைகளில் வளர்ந்து நிற்கும் காட்டு கருவேல மரங்களை அழிக்கும் பொருட்டு முடிவு செய்து , அதற்காக தெருவாசிகளிடமே நிதிதிரட்டி தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது.

இப்பணிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கடற்கரைத்தெரு முஹல்லா நிர்வாகிகள் , தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்ற இளைஞர்கள் , தெருவாசிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் கட்டமாக அதிக அளவில் வளர்ந்திருந்த காட்டு கருவேல மரங்கள் அடியோடு வெட்டப்பட்டு தற்போது குளங்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அரசை நம்பி பலனில்லை என்பதை அறிந்து நீர்நிலைகளை தங்கள் சொந்த செலவிலேயே தூர்வாரி நிலத்தடி நீரை உறிஞ்சும் கருவேல மரங்களையும் வெட்டி நீர்நிலைகளை பாதுகாக்கும் கடற்கரைத் தெருவாசிகளின் இச்செயல் பாராட்டுக்குரியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...