Friday, May 10, 2024

நாளை அனைத்து மருந்து கடைகளும் மூடல்!!

Share post:

Date:

- Advertisement -

நாடு முழுவதும் ஆன் லைன் மருந்து விற்பனை செய்யப்படுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.

இதனால் தரம் குறைந்த மற்றும் காலாவதியான போலி மருந்து விற்பனை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துகள், மருத்துவரின் பரிந்துரை அல்லது மருந்தகரின் மேற்பார்வையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது மருந்துகள் சட்ட விதியாக உள்ளது.

ஆனால், ஆன் லைன் மூலம் மருந்து விற்பனை செய்யப்படும் போது இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டிய வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

ஆன் லைனில் மருந்து விற்பனை செய்யப்படுவதன் மூலம் கிராமப்புற, சிறு மருந்து கடைகள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இந்த மருந்து கடைகளை நம்பியுள்ள பணியாளர்கள் பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு தனது முடிவினை கைவிட வலியுறுத்தி நாளை (28-09-2018) வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மருந்து கடைகள் மூடப்படுவதாக அகில இந்திய மருந்து வணிகர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதன்படி தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நாளை அனைத்து மருந்து கடைகளும் மூடப்படும் என்றும் அரசு மருந்தங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் மற்றும் கிளினிக்குகள் இந்த போராட்டத்தில் பங்கேற்காது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...