தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பல இடங்களில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் இச்சூழலில், மல்லிப்பட்டினத்தில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள், மல்லிப்பட்டினத்தில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்க ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தனர். மேலும் கூறிய அவர்கள் மல்லிப்பட்டினத்தில் பல இடங்களில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து, பொதுமக்களை பன்றிக் காய்ச்சல் பரவுவதிலிருந்து காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.