தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் திமுகவின் கிராம சபா கூட்டம் இன்று (ஜன 29) மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராம சபா கூட்டம் நடைபெற்று வருகிறது.பீனாமுனா நூர்தீன் தலைமையில் கூட்டம் நமைபெற்றது.முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்எஸ பழனிமாணிக்கம் கலந்துகொண்டு கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் கஜாவில் பாதிக்கப்பட்ட பகுதியான மல்லிப்பட்டிணத்தில் அரசு நிவாரணம் மற்றும் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை என்றும் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கிடுவதில்லை என்றும் பொதுமக்கள் முறையிட்டனர்.குறைகளை கேட்ட பின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிடுவதாக கூறினார்.
கூட்டத்தில் பேராவூரணி முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக் குமார்,ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் MKS ஹபீப் முகமது, மூத்த நிர்வாகிகள் கபீர்தாஹீர்,காங்கிரஸ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார்,கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் வீரப்பன், அப்துல் காதர் தமிழ்நாடு விசைப்படகு மீனவர் நலசங்க மாநில செயலாளர் AK.தாஜுதீன்,ராஜிவ்காந்தி பஞ்சாயத் ராஜ் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் மற்றும் திமுகவின் நிர்வாகிகள்,தோழமை கட்சியினர்,பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
பட உதவி நூருல் அமீன் (திமுக இளைஞரணி)