Saturday, April 27, 2024

இரவு முழுவதும் மின்விநியோகமின்றி இருளில் மூழ்கிய அதிரை !

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் நேற்று புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மழையைத் தொடர்ந்து 11 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டது. ஆனால் மின்வாரியம் தரப்பில், துவரங்குறிச்சி அருகில் ஏற்பட்ட பழுதே மின்தடைக்கு காரணம் என கூறப்பட்டது.

பின்னர் மழை நின்றும் மீண்டும் மின்விநியோகம் செய்யப்படவில்லை. விடிய விடிய மின்சாரம் இன்றி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சிறு குழந்தைகளும் மின்சாரம் இன்றி தூக்கத்தை தொலைத்தனர்.

காலை ஆகியும் மின்சாரம் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், 7.30 மணிக்குள் மின்சாரம் வராவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இறுதியாக சுமார் 7.35 மணியளவில் மின்விநியோகம் செய்யப்பட்டது. இதனால் சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....