பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட பதிவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து படம் பதிவிடப்பட்டிருந்தது. மேலும், ‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலரிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ என்ற குரள் கூறப்பட்டு குறளுக்கான விளக்கம் ஒன்றையும் பதிவிட்டிருந்தது.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?
அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் pic.twitter.com/xBeXs9aXHa
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 2, 2019
வள்ளுவரின் வழக்கத்துக்கு மாறான புகைப்படத்தால் கொதிப்படைந்த தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள், பாஜகவை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம் ! எத்தனை வர்ணம் பூசினாலும் உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்! என பாஜகவினரை கடுமையாக சாடியுள்ளார்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்!
எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும்.
சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!#BJPInsultsThiruvalluvar
— M.K.Stalin (@mkstalin) November 3, 2019