அதிராம்பட்டினம் பண்பலை 90.4ன் நேயர்கள் சந்திப்பு நிகழ்வு இமாம் ஷாஃபி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
நிலையத்தின் முதன்மை இயக்குநர் எம் எஸ் தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் பி எச் அப்துல் ஹமீது,மற்றும் முனவ்வர் ஆகியோர் கலந்து கொண்டு நேயர்களுடன் கலந்துரையாடினார்.
முன்னதாக இந்நிகழ்வில் காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் அப்துல்காதர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ்த்துறை ஆசிரியர் செய்யது அஹமது கபீர் முன்னுரை நிகழ்த்தினார் அதில் இலங்கை வானொலியில் அங்கம்
உலக அறிவிப்பாளராக உயர்ந்த விதம் குறித்து விளக்கினார்.
பின்னர் பேசிய அப்துல் ஹமீது, அண்ணாவியார் அவர்கள் இசையினூடாக தமிழை பரப்பியவர்களில் ஒன்றாவர், வானொலியின் தந்தையானவர் இத்தாலியை சேர்ந்தவரான மார்கோனி ஆவார்,அவரின் ஆய்வகத்திற்கு சென்ற நான் அதனை நான் அறிவிப்பாளர் ஆன உடன் சென்ற போது எடுத்த காணொளி ஒன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் நேயர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நூற்றுகனக்கானோர் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை எடுத்துதுரைத்தனர்.