Tuesday, May 14, 2024

அதிரை : சிறு பிராயத்திலேயே நோயை தினிக்கும் பேரூராட்சி !கண்டுகொள்ளாத அதிகாரிகளால் நோய் பரவும் அபாயம்!!

Share post:

Date:

- Advertisement -

கண்டுகொள்ளாத அதிகாரிகளால் நோய் பரவும் அபாயம்!!

இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம் தமிழக மக்களால் பால்வாடி என அழைக்க படுகிறது.

இந்த மையத்தில் பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன.

1975 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் (ICDS) கீழ் குழந்தைகள் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவும் அவர்களிடையே பெருமளவில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் இம் மையங்கள் துவங்கப்பட்டன.

அந்த வகையில் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வரும் சமூதாய ஊட்டச்சத்து மையத்தின் அருகே கழிவு நீர் குட்டைப்போல் தேங்கி கிடக்கிறது.

இதனால் அங்கு பயிலும் குழந்தைகள் கொசுக்கடியால் அவதியுறுவதும், காய்ச்சல் உள்ளிட்ட தோல் நோய்களால் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார துறை அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்து சுத்தம் செய்வதுடன், அங்கு கழிவுநீரை கொட்டும் குழாய்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...