Sunday, May 12, 2024

அதிரையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பும் வட நாட்டு ஊழியர்கள் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் பல்வேறு பணிகளுக்காக பீஹார் உத்திரப்பிரதேசம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதிரையில் பணி புரிந்து வருகின்றனர்.

இவர்கள் சேர்மன்வாடி,கடைதெரு,பழஞ்செட்டி தெரு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கி உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வேளையில்லாமல் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.

அரசு,மற்றும் தன்னார்வலர்கள் உதவி வந்த நிலையில் இவர்களை தனி ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்ப அரசு பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு உள்ளது.

அதன் படி இன்று மாலை கிராம நிர்வாக அலுவலர் அஜாருதீன் தலைமையில், முதற்கட்டமாக கணக்கெடுப்பு பணி துவங்கியது.

இதில் பெயர் ஆதார் எண் உள்ளிட்டைவைகள் சரிபார்க்கப்பட்டு தொழிலாளர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

இதுகுறித்து எம்மிடம் தெரிவித்த கிராம நிர்வாக அதிகாரி, இன்னும் சில நாட்களில் சென்னைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் அங்கிருந்து மத்திய அரசு இயக்க உள்ள சிறப்பு இரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கபடுவார்கள் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...