Tuesday, May 7, 2024

தீவிர களப்பணியில் அதிரை பேரூராட்சி அதிகாரிகள்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கும் குப்பைகளை அன்றாடம் பேரூராட்சி ஊழியர்களால் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், பொறுப்பற்ற சிலரால் விதிகளில் விசி எரியப்படும் குப்பைகள் சிதறி துர் நாற்றம் விசி நோயை பரப்பும் அபாயம் இருந்து வந்தன.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர், சுகாதார ஆய்வாலர்கள் தன்னார்வ அமைப்பினர் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கேட்பாரில்லை.

இந்த நிலையில் அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு புதிதாக வந்துள்ள செயல் அலுவலர் பரமேஸ்வரி, மற்றும் சுகாதார ஆய்வாலர் தமிழ்வாணன் ஆகியோரின் தீவிர களப்பணியால், பல்வேறு பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைக்களை போர்கால அடிப்படையில் சுத்தம் செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு குப்பைகளை தரம் பிரித்து வீதிக்கு வரும் குப்பை வண்டியில் செலுத்தினால் மட்டுமே சுகாதாரம் மேம்படும், இதனை விடுத்து வீட்டில் இருக்கும் குப்பைகளை விதிகளில் வீசி எரிவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்றுக்கு பொதுமக்களும் ஆளாக நேரிடும் எனவே பொதுமக்கள் தங்கள் விடுகளில் சேமிக்கும் குப்பைகளை தரம் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.

தங்கள் வீடுகளுக்கு குப்பை பெறுவதற்கு தெரு வாரியாக துப்புரவு தொழிலாளர்கள் விரைவாக நியமிக்க உள்ளனர் என்றும் அதுவரை பொதுமக்கள் பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க செயல் அலுவலர் கேட்டு கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...