Saturday, May 4, 2024

அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 1 மற்றும் 2ன் சார்பில் இன்று சனிக்கிழமை மாபெரும் ரத்ததான முகாம் அதிரையில் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 1 மற்றும் 2 மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த இரத்ததான முகாமில் 52 யூனிட் இரத்தம், தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவர் ஸ்ரீதேவி மற்றும் இரத்த வங்கி ஆலோசகர் புனிதா ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

இந்த இரத்ததான முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் மற்றும் மாவட்ட துணை தலைவர் வல்லம் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அதிரை கிளை 1ன் நவாப் ஷா, ஹபீப், தௌபீக் மற்றும் கிளை 2ன் பஜால், ஜப்பார், ஷபி, சிராஜுதீன், முகைதீன் மற்றும் அபூபக்கர் ஆகியோர் இம்முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் ஷேக் அலி கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார். மேலும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...