Sunday, May 5, 2024

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தஞ்சையில் தமுமுக ஆர்பாட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

தமுமுக தஞ்சை மாநகர தெற்கு மற்றும் வடக்கு சார்பாக இன்று தஞ்சை ரயில் நிலையம் அருகாமையில் பாபர் மசூதியை இடித்த கயவர்களை கண்டித்து பயங்கரவாத எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மமக மாவட்ட தலைவர் S.அஹமது ஹாஜா தலைமையேற்று, M.ஜஃபருல்லாஹ், Er.A. முஹம்மது இலியாஸ், G.முஹம்மது செல்லப்பா,M.முஹம்மது சலீம் புலவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலர் A.ஷேக் மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து விசிக கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், மமக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் சரவண பாண்டியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்ற இறுதியாக தலைமைக் கழக பேச்சாளர் கோவை.ஜெய்னுலாப்தீன் கண்டன உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, எதிர்வரும் ஆண்டிற்குள் இஸ்லாமியர்களிடம் பாபர் மசூதியை ஒப்படைக்காவிடில் அடுத்த டிசம்பர் 5 ம் நாள் தமுமுகவின் தலைமை கட்டளையிட்டால் அயோத்தி சென்று தடையை உடைத்து பாபர் மசூதியை கட்டுவோம் என்றார். இறுதியாக தஞ்சை ரியாஸ் அஹமது நன்றியுரை கூறினார். இந்த ஆர்பட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துக் கொண்டது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...