Wednesday, May 8, 2024

அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு!

Share post:

Date:

- Advertisement -

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்தது. பல்வேறு சுற்றுலாத்தலங்களை இணைக்கும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில்(வண்டி எண் : 06035,06036) மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி

எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் புறப்பட்டு வேளாங்கண்ணி வந்து சேரும் (வண்டி எண் 06035)

வேளாங்கண்ணி – எர்ணாகுளம்

மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஜனவரி 8, 15, 22 மற்றும் 29ம் தேதிகளில் புறப்பட்டு எர்ணாகுளம் சென்று சேரும்(வண்டி எண் 06036)

தெற்கு ரயில்வே, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவையை ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு செய்துள்ள நிலையில், இதனை நிரந்தர ரயிலாக மாற்றி இயக்க வேண்டும் என்பதே தமிழகம் மற்றும் கேரள ரயில் பயணிகள் மற்றும் பயணிகள் நலச்சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...