Friday, May 10, 2024

வாசனை_கவியன்பன்கலாம்

Share post:

Date:

- Advertisement -

காற்றில் மிதந்து வந்து
நாசியில் நுழைந்து
மூளைக்குத் தரும் பரிசு

தேனீயின் சுறுசுறுப்பைத்
தேடிவந்து தென்றல் வழியாக
உணர்வுக்குத் தரும் உணவு

கனவுகளை உருவாக்கும்
கற்பனைச் சிறகுகளை விரிக்கும்
எண்ணங்களுக்குத் தரும் வித்து

சுற்றியுள்ளோர் உன்மீது
பற்றுக் கொள்ள வைக்க
தொற்றிக் கொள்ளும் தோழமை

உணர்ச்சிகளை மென்மையாக்கி
ஆன்மாக்களின் அரவணைப்பை
ஆரத்தழுவச் சொல்லும் ஈர்ப்பு

கைகளால் கசக்கினாலும்
கடைசி வரைக்கும் நறுமணம்
களையாதிருக்கும் தியாகம்

பூக்கள் ஈன்றெடுத்ததால்
பூமியை முத்தமிட்ட மழையால்
புல்லின் மீது பட்ட பனித்துளியால்

ஆக்கம்:

கவியன்பன் கலாம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...