Sunday, May 5, 2024

அரஃபாத்!

Share post:

Date:

- Advertisement -

வெள்ளுடையில் பாவக்கறை
வெளுக்கும் வண்ணான் துறை

ஆதி பிதாவும் அன்னையும்
சந்தித்த “அருள்மலை”த் திடல்
ஆகிரத்தின் “மஹ்ஷரை” நினைவூட்டும் மக்கள் கடல்!

ஒருநிமிடமேனும் தரிபட
நிறைவேறும்
ஹஜ் எனும் பேறு
கருவிலிருந்து பாவக்
கறையின்றி வெளியாகும் சிசு போன்று !

கனவினை மெய்ப்டுத்த
“கலீலுல்லாஹ்”அறிந்த இடம்
“காத்தமுன் நபி” இறுதிப் பேருரையின்
கட்டியம் கூறும் தடம்!

பாலுக்கு அழும்
பச்சிளம் பிள்ளை போல்
பாவமன்னிப்பால் “ஈமானின்”
பசிக்கு அழும் நாள்!

நிறைவான மனத்தினில்
நிம்மதி “ஆக்ஸிஜனாம்”
இறையின் காதலுக்குள்
இணையும் ஆன்மாவாம்!

கண்ணீர்க் கடலாகும்
பாலையின் பெருவெளி
எண்ணங்கள் தெளிவாக்கும்
ஏற்றிடும் “கல்பின்” பேரோளி!

ஆக்கம்;
கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்.

குறிப்பு:

“அருள்மலை”= ஜபலர்ரஹமத்

“மஹ்ஷர்” = மறுமையில் விசாரணைத் திடல்

” கலீலுல்லாஹ்”= இறைவனின் நண்பர்

“காத்தமுன் நபி”= இறுதி நபி

“கல்பு”= உள்ளம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...