Saturday, May 18, 2024

அடாவடியில் ஈடுபட்ட அதிரை திமுக கவுன்சிலரின் கணவர்! நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்தல்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் ARDA அமைப்புக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற மருத்துவமனைக்கான கட்டுமான பணியை அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரும் தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரான முகம்மது சாலிஹ் மேற்கொண்டுவந்தார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் கிருத்திகாவின் கணவரான ராஜா, கட்டுமான பணியை சட்டவிரோதமாக நிறுத்தியதுடன் ஆபாசமான வார்த்தைகளை பேசி அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் சாலிஹை தாக்க முயன்றார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை கண்டித்து மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் மன்றம் தமிழ்நாடு காவல்துறை மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ட்வீட் செய்துள்ளது. அதில் அதிராம்பட்டினத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர் முஹம்மது சாலிஹை தகாதவார்த்தையில் திட்டி, தாக்க முயன்ற நகராட்சி திமுக கவுன்சிலர் கிருத்திகாவின் கணவர் ராஜாவை வன்மையாக கண்டிக்கிறோம். காவல்துறையில் அளித்துள்ள புகார் மீது @tnpoliceoffl உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
CC: @mkstalin என குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...