Saturday, May 18, 2024

ஹஜ் எனும் அருட்பேறு

Share post:

Date:

- Advertisement -

இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு

“லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர்

ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி

இப்புவி யெங்குமே ஈர்ப்பு.

சாந்தம் பொழியச் சமத்துவம் காணவே

காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி

துருவான பாவம் துடைக்கும் பணிகள்

இரும்பு மனமே இலகு.

குழந்தையாம் இஸ்மாயில்(அலை) குத்திய பாதம்

உழன்றதால் பாலையில் உண்டான நீரை

அருந்துவோ ரெண்ணம் அடையும் பலன்கள்

மருந்தாம் பிணிக்கு மகிழ்ந்து.

மறுமையாம் தீர்ப்புநாள் மஹ்ஷரின் தோற்றம்

பொறுமையாய் நிற்கும் பொழுதில ரங்கேற்றம்

நீண்ட இறைஞ்சுதல் நெஞ்சை உருக்கிட

மீண்டு வருவோம் மிளிர்ந்து.

பிறக்கும் நிலையில் பிழைக ளறியா(து)

பிறக்கும் குழந்தைப் பிறத்தலைப் போல்

புடமிடும் தங்கமாய்ப் பூமியில் வாழ

திடமுடன் மாற்றும் திறன்,

அறுக்கத் துணிந்தார் அருமை மகனை

பொறுத்தே பணிந்தார் புதல்வர் மகிழ்வுடன்

ஐயம் களைந்த அடியாரின் அன்பினை

மெய்பிக்கச் செய்திடும் மாண்பு.

இறைச்சி இரத்த மெதுவுமே நம்மை

இறைவனும் வேண்டு மியல்பில் கிடையாது

அன்பு நிலைக்க அறமாய் வறியோர்கள்

இன்பம் பெறுவதற் கீந்து.

”கவியன்பன்” கலாம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...