Friday, March 20, 2026

அதிரை அருகே சாதி வெறி கொலை!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஊரைச் சேர்ந்த அசோக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த உஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர்.
இதனையடுத்து, இருவரும் வீட்டை விட்டு ஓடி தலைமறைவானர்.

இந்நிலையில் தலைமறைவானதையொட்டி இரு குடும்பத்தாரும் அதிரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அந்த இளைஞரின் சகோதரர் கணேசன் நேற்று(03/04/2018) அதிரை பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தார், அவரை புதுக்கோட்டை உள்ளூர் பகுதியை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீர் என கட்டை மற்றும் கல்லால் அடித்து அதிரை பேரூராட்சி அலுவலகம் எதிர் புறம் வரை துரத்தி உள்ளனர்.

இந்நிலையில், அங்கு மக்கள் கூட்டம் கூடியதால் கணேசனை தாக்கிய அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

படுகாயமடைந்த கணேசனை அங்குள்ளவர்கள் மீட்டு அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று பட்டுகோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

சாதி மாறி திருமணம் செய்ததன் காரணமாக ஒரு இளைஞனை 100க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் அடித்து கொலை செய்த சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img