Monday, February 2, 2026

புறக்கணித்த பொதுமக்கள்! மேடையில் கோபமடைந்த பொன்.ராதாகிருஷ்ணன்!!

spot_imgspot_imgspot_imgspot_img

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அரசு விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ளாததால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோபமடைந்தார்.

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனை அருகே இருந்த மேடை நோக்கிச் சென்றார்.

பந்தலில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டும் இருந்ததைக் கண்ட அமைச்சர், கிராம மக்கள் எங்கே என அதிகாரிகளைப் பார்த்து கேள்வி எழுப்பினார். மேலும் மக்கள் இல்லாமல் விழா எதற்கு என கேள்வி எழுப்பிய அவர், மக்களை அழைத்துவரும் வரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் எனக் கூறியாதோடு, உடனடியாக மக்களை அழைத்து வருமாறு கூறினார்.இதையடுத்து அரசு வாகனங்களில் சென்ற அதிகாரிகள் மக்களை விழாப் பந்தலுக்கு அழைத்து வந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img