Wednesday, February 19, 2025

இசட் ப்ளஸ் பாதுகாப்பு கோரும் முதல்வர்!

spot_imgspot_imgspot_imgspot_img

 

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக காவல்துறை கோரிக்கை விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் முதலமைச்சர்கள் இசட் பிளஸ் பாதுகாப்பு கோருவது வழக்கமானது தான் என முன்னாள் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சிலர் கௌரவத்திற்காக கூட இசட் பிளஸ் பாதுகாப்பு கோருவார்கள் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி இசட் பிளஸ் பாதுகாப்பு கோருவதன் பின்னணி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது துணை முதல்வராக உள்ள ஓபிஎஸ்-க்கு மத்திய அரசின் வை-பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முதல்வருக்கோ மாநில போலீஸாரின் பாதுகாப்பு மட்டுமே உள்ளது. இதனையடுத்தே ஓபிஎஸ்-ஐ விட தான் உயர்ந்தவர் மற்றும் அதிகாரமிக்கவர் என்பதை காட்டவே எடப்பாடி பழனிசாமி, இசட் பிளஸ் பாதுகாப்பு கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...

அதிரை : கூண்டோடு காலியான நாதக – ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதியின் நாம் தமிழர் கட்சியினர் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் சீமான் பெரியார் குறித்த...

மமகவின் 17ம் ஆண்டு தொடக்கம் – அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி...

மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img