Sunday, February 1, 2026

மல்லிப்பட்டிணம் நாட்டுப்படகு மீனவர்களுக்கு அத்தியாவசிய பொருளுதவி… !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கள்ளிவயல் தோட்டம் நாட்டுபடகு மீனவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இன்று(ஏப் 12) வழங்கப்பட்டது.

கொரோனா தொற்றின் பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது, இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.இதில் மீனபிடி தொழிலும் அடங்கும்.

இந்நிலையில் மல்லிப்பட்டிணம் கள்ளிவயல்தோட்டம் நாட்டுபடகு மீனவர் சங்கம் சார்பில் சிரமத்திற்குள்ளாகும் மீனவர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் மீன்பிடி தொழிலுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில் அரசு வகுத்து கொடுத்த நிபந்தனைகளை பின்பற்றிட சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வை மீனவர்களுக்கு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜுதீன், கள்ளிவயல் தோட்டம் நாட்டுபடகு சங்க தலைவர் செய்யது முகமது,செயலாளர் அப்துல் ரகுமான்,பொருளாளர் ரஹ்மத்துல்லா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img