தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆர்சனிக்கம் ஆல்பம் -30 ஹோமியோபதி மருந்தை ஹோமியோபதி டாக்டர் அருண் சுதேஷ் இலவசமாக வழங்கினார். இது குறித்து அவர் கூறும்போது, கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் ஆயுஷ் மருத்துவத்தை பயன்படுத்தும் விதமாக தமிழக அரசானது ஆரோக்யம் சிறப்பு திட்டத்தை 23-04-2020 அன்று அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது(G.O.no-201). அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்(Immune Booster) ஹோமியோபதி “ஆர்சனிகம் ஆல்பம் 30” மருந்தை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றோம். ஆகவே பொதுமக்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
பேராவூரணி பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு கொரோனா – 19 ஹோமியோபதி நோய் எதிர்ப்பு ஆற்றல் மருந்து வழங்கல்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





