மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடைவிதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட சோதனையாக இந்த திட்டம் தற்போது தலைமை செயலகத்தில் அமல்படுத்த பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச்.18ம் தேதி மகாராஷ்டிர புத்தாண்டு தினமான அன்று, மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில் தடை அமல் செய்யப்படும். தடையை மீறும் உற்பத்தியாளர்கள், வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்என்றும், அதேநேரம் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்படாது என்றும் மகாராஷ்டிர அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





