Thursday, March 19, 2026

பாபர் மஸ்ஜித் இடித்தவர்களை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அதிரை நகர தமுமுக ஆர்ப்பாட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 450 ஆண்டுகால பழைமை வாய்ந்த பள்ளி கரசேவகர்களால் 1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ம் தேதி இடிக்கப்பட்டது.

இதன் பின்னர் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து இறுதியாக அலகாபாத் உயர்நீதிமன்றம் 2.77 ஏக்கர் நிலத்தை 3 பங்குகளாக பிரித்துக் கொள்ள ஆணையிட்டது.

இஸ்லாமிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக இன்று (05.08.2020) அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

பாபர் மஸ்ஜித் இடித்தவர்களை நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று அதிரை நகர தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா தலைமை தாங்க, நகர செயற்குழு உறுப்பினர் நசுருத்தீன்,மதுக்கூர் ஜபருல்லாஹ், ஆஷிக், A.J.ஜியாவுதீன் ஆகியோர் கண்டன கோஷங்களை முழங்கினர்.

அதிரை நகர தமுமுக முன்னாள் நகரத் தலைவர் (சாந்தா) சாகுல் ஹமீது மற்றும் அன்வர் அவர்கள் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக அதிரை தமுமுக நகர செயலாளர் ஷேக் தாவூத் நன்றியுரை கூறினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img