முகநூலில் முகம்மது நபி குறித்து கேவலமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட சந்தோஷ் தனபால் என்ற சமூக விரோதியை கைது செய்ய வலியுறுத்தி அதிரை காவல்நிலையத்தில் இஸ்லாமியர்கள் ஒன்றாக திரண்டு புகார் அளித்தனர். இதனையடுத்து சம்மந்தப்பட்ட முகநூல் ஐடியின் பெயரில் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போன்ற பல்வேறு சமூகத்தினர் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் தேசத்தின் பொது அமைதியை கெடுத்து கலவரத்தை தூண்ட நினைக்கும் தீவிரவாதிகளின் எண்ண நிறைவேறாது என்று இஸ்லாமியர்கள் சூளுரைத்துள்ளனர். மேலும் சமூக விரோதி சந்தோஷ் தனபாலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





