இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் SSM குல்முகம்மது நினைவு எழுவர் கால்பந்து தொடர் போட்டி ஆண்டுதோறும் அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். இதில் மாநில மற்றும் தேசிய அளவிலான அணிகள் பங்கேற்று விளையாடும்.
அந்த வகையில் அதிரையர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த ஆண்டுக்கான இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல்முகம்மது நினைவு 23ம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி இன்று 09/06/2023 மாலை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் மனச்சை 7s மனச்சை அணியினரும் யுனைடெட் 7s நாகூர் அணியினரும் மோதுகின்றனர். இப்போட்டி சரியாக இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகிறது. அதுசமயம், கால்பந்தாட்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கால்பந்து கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.